மன்னார் மாட்டிஸ் உதை பந்தாட்ட கழகம் வெற்றி-12 ஆம் நாள் சுற்று.............
மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 12 ஆம் நாள் போட்டிகள் நேற்று சனிக்கிழமை (29) இரவு 7.30 மணியளவில் மின் ஒளியில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
'மன்னார் பிரிமீயர் லீக்' தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த போட்டி இடம் பெற்றது.
குறித்த உதை பந்தாட்ட போட்டியானது ஈடன் உதை பந்தாட்ட கழகத்திற்கும் மன்னார் மாட்டிஸ் உதைபந்தாட்ட கழகத்திற்கு இடையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாட்டிஸ் உதைபந்தாட்ட கழக வீரர்களான எஸ்.சாள்ஸ் 21 ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும்,ஜே.ரிசிகேசன்; 68 ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும்,ஜே.ஜஸ்ரின் 71 ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும் அடித்தனர்.
-ஈடன் உதை பந்தாட்ட கழகம் இச்சுற்றில் ஒரு கோலையும் அடிக்கவில்லை.
இந்த நிலையில் மன்னார் மாட்டிஸ் உதை பந்தாட்ட கழகம் 3:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
'மன்னார் பிரிமீயர் லீக்' தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த போட்டி இடம் பெற்றது.
குறித்த உதை பந்தாட்ட போட்டியானது ஈடன் உதை பந்தாட்ட கழகத்திற்கும் மன்னார் மாட்டிஸ் உதைபந்தாட்ட கழகத்திற்கு இடையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாட்டிஸ் உதைபந்தாட்ட கழக வீரர்களான எஸ்.சாள்ஸ் 21 ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும்,ஜே.ரிசிகேசன்; 68 ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும்,ஜே.ஜஸ்ரின் 71 ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும் அடித்தனர்.
-ஈடன் உதை பந்தாட்ட கழகம் இச்சுற்றில் ஒரு கோலையும் அடிக்கவில்லை.
இந்த நிலையில் மன்னார் மாட்டிஸ் உதை பந்தாட்ட கழகம் 3:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மன்னார் மாட்டிஸ் உதை பந்தாட்ட கழகம் வெற்றி-12 ஆம் நாள் சுற்று.............
Reviewed by Author
on
March 02, 2020
Rating:
No comments:
Post a Comment