அண்மைய செய்திகள்

recent
-

சைனா தந்த கொரோனா......எமனின் தூதுவனா.....!!!

சைனா தந்த கொரோனா......!!!

சைனா தந்த கொரோனா
நைசா பரவுதே தானா
சொந்தமெல்லாம் சாகுதே வீணா
வந்துபார்க்க முடியாது ஏன்னா
வந்திடுமே எனக்கும் கொரோனா…

சீ….னா-இது
சின்ன….பிள்ளைத்தனமா…
என்ன சொல்லி என்னா...
ஆட்கொல்லி நோயே கொரோனா
விடுமா அண்ணா…இங்க
நின்னா நானும் ஆயிடுவேன் மண்ணா…

மரணத்தின் மகனா...
எமனின் தூதுவனா-எம்மில்-கொரோனா...19
மறைந்து 14நாள் இருப்பானா…
மரணம் தருபவனா….சைத்தானின் சாயல் இவனா...

 சொந்தம் பந்தம் சூழ இருந்த இனிமை
நீ வந்ததின்னால் இப்போ தனிமை
இது இல்ல  உனது  பெருமை
இது  நீ செய்யும் கொடுமையிலும் கொடுமை

தீண்டலில் வந்து
தொண்டையில் 4நாள் தங்கி
நுரையீரல் மங்கி
மூச்சிறைப்போடு உயிரை வாங்கி –நீ கொடிய
கொரோனா வைரஸ் அங்கி
நீ மனித குலத்தின் துரோகி….

சீனாவில் உன் பிறப்பு-நீ
செல்லும் இடமெல்லாம் இறப்பு
சொல்ல முடியாது உன் சிறப்பு-இன்னும் உன்னை
வெல்ல முடியவில்லையே தவிப்பு

கொரோனா…..நீ
ஆணா…! பெண்ணா…!
விஞ்ஞானத்தின் கேள்வி....?
இறைவனின் செயலா…! மெய்ஞானத்தின் கேள்வி...?
எம்மதமும் செய்யும் வேள்வி
ஏற்றம் தருமே விரைவில் கலியுக கல்வி

பணத்தினால் எல்லாம்
பணியும் என்று மார்பு தட்டும்
மனித மனங்களை
மமதைகொண்ட இதயங்களை
மண்டியிடவைத்தாய்….

வீட்டினை மறந்த
வீரருக்கும் சூரருக்கும் சுகபோக வாதிகளுக்கும்
விரும்பியோ…விரும்பாமலோ…
விடுமுறையளித்தாய்….

சுத்தமும் சுய ஒழுக்கமும்
சத்தம் இன்றி பேசவும்-அநாகரிக
சம்பிரதாயங்களை வெறுக்கவும்
சத்தாண உணவு பழக்கத்தினையும்
சாதுவாக வந்து ஏதுவாக கற்றுத்தந்தாய்

தன்னைப்போல எல்லோருமே
தரணியிலே என்று நினைக்க
தலைக்கணத்தினை
தலைமறைவாக்கி விட்டாய்-நீ
கோரத்தாண்டவமாடுகிறாய்

இனம் மொழி மதம் நிறம் நாடு
எண்ணம் இல்லாமல் வேறுபாடு
எல்லோரையும் ஒற்றுமையாக்கிவிட்டாய்
இரத்தம் சிவப்புதான் இறப்பு ஒன்றுதான் என்று

உணர்ந்து செயல் புரிந்தால்
உலகை விட்டு மனிதகுலத்தின் எதிரியை
உடனே அகற்றராலாம்
உன்னத பணியில் ஒன்றுபடுவாம்
மனிதம் வென்றுவிடும்.

கவிஞர் வை.கஜேந்திரன்,BA







சைனா தந்த கொரோனா......எமனின் தூதுவனா.....!!! Reviewed by Author on March 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.