அண்மைய செய்திகள்

recent
-

வீட்டு வாசலுக்கு தேடிவரும் முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் மருத்துவக்குழு..!

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி நிரோசினி திலீபன் தலைமையில் வைத்தியர் நிரோசா சிரேஸ்ட தாதியர் சுகிந்தன், மருந்தாளர், பணியாளர்கள், வாகன சாரதி ஆகியோர் தங்களது வைத்தியசாலையில் மாதாந்த கிளினிக் பெறுவோருக்கு நடமாடும் சேவை மூலம் ஒவ்வொருவருடைய வீட்டு வாசலுக்கு சென்று பரிசோதித்து அவர்களுக்குரிய மருந்துகளை இன்று(25.03.2020) வழங்கி வருகின்றனர்.

இதை அறிந்து மருத்துவ தேவை நிமிர்த்தம் செல்லும் ஏனைய நோயாளிகளுக்கும் மருந்துகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் எல்லைக்குட்பட்ட உண்ணாப்பிளவு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு நகரம், கரைச்சிகுடியிருப்பு, செல்வபுரம், முள்ளிவாய்க்கால் கிழக்கு ஆகிய கிராமங்களுக்கு இந்த மருத்துவ சேவை வழங்கவுள்ளனர்.

இன்று ( 25.03.2020 ) உண்ணாப்புளவு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, ஆகிய கிராமங்களுக்கு சென்று தங்களது மருத்துவ சேவையினை வழங்கியுள்ளனர்

நாளை ஏனைய கிராமங்களுக்கு மருத்துவ சேவையினை வளங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.






வீட்டு வாசலுக்கு தேடிவரும் முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் மருத்துவக்குழு..! Reviewed by Author on March 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.