அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தின் நிலை தொடர்பாக அரச அதிபர் தலைமையில் அவசர கலந்துரையாடல்-படங்கள்

மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும்,முன் ஆயத்தம் தொடர்பாகவும் அவசர கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (30) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் பிரதேசச் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள், வங்கி முகாமையாளர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராயப்பட்டதோடு, மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் கையிறுப்பு தொடர்பாக ஆராயப்பட்டது.மேலும் பிரதேச செயலாளர்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது   ஓய்வூதியம்  பெறுபவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக வங்கி முகாமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக எதிர்வரும் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில்  ஓய்வூதியம் பெறுபவர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஒத்துழைப்போடு அவர்களை  ஏற்றி இறக்கும் பணி மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டது.

அதற்கு அமைவாக பிரதேச செயலாளர்கள் ஊடாக  ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளுபவர்களின் புள்ளி விபரங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் மாவட்டத்தின் நிலை தொடர்பாக அரச அதிபர் தலைமையில் அவசர கலந்துரையாடல்-படங்கள் Reviewed by Author on March 31, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.