அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற மகா யாகம்.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி   -மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா யாகம் ஆலய திருப்பணிச்சபையின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை 21-03-2020 காலை இடம் பெற்றது.

 வேகமாக பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கத்தனை முடிவுறுத்தி உலக மக்கள் நலம் பெற பிராத்திக்கும் வண்ணம் உலக நாயகனாக வைத்திய நாதனாக கௌரி அம்பிகையுடன் வீற்றிருக்கின்ற திருக்கேதீச்சர நாதர் திருக்கோயில் சனிப்பிரதோச நாளான இன்று சனிக்கிழமை (21)  காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை குறித்த மகா யாகம் இடம் பெற்றது.

ஆலய திருப்பணிச் சபையினரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த மஹா யாகத்தின் போது உலக மக்கள் நலன் பெற வேண்டி பிராத்தனைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.





கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற மகா யாகம். Reviewed by Author on March 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.