அண்மைய செய்திகள்

recent
-

சீனாவில் மீண்டும் கொரோனா -ஜிம், நீச்சல்குளங்கள் பூட்டு - லொக்டவுனில் 1கோடி மக்கள் -


தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலில் சீனாவில் வுகான் மாநகரில் கண்டறியப்பட்டது.

சீனாவில் மட்டும் இந்த நோய் தொற்றுக்கு தற்போது வரை 82,827 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 4632 பேர் உயிரிழந்ததாகவும் சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுவரையில் உலகளாவிய ரீதியில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 29 இலட்சத்து 82ஆயிரத்து 647 என்பதோடு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2இலட்சத்து 6 ஆயிரத்து 342 ஆகும்.
அதிகூடிய உயிரிழப்புக்களையும் தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் பார்த்தோமானால் அமெரிக்காவே முதன் நிலையில் நிற்கின்றது. அமெரிக்கா, பிரித்தானியா உட்பட, அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தத்தம் நாட்டு எல்லைகளை மூடியதோடு, பாடசாலைகள் மதுபானவிடுதிகள் , விமானபயணங்களையும் மூடியிருக்கின்றது.

இந்நிலையில் சீனா இரண்டரை மாதங்களின் பின்னர் கொரோனா வைரஸ் நோயை வென்றுவிட்டோம் எனக்கூறி பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலையில் இறங்கியதோடு தன் நாட்டு லொக்டவுணை தளர்த்தியதோடு மக்கள் சாதாரண இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இதற்கமைய ரஷியாவுக்கு சென்றிருந்த சீனர்கள் எட்டுபேர் சொந்த நாடு திரும்பினர். அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
மீண்டும் நாட்டிற்குள் கொரோனா நுழைந்து விட்டது என சீனா அஞ்சுகிறது. இதனால் ரஷியா எல்லையில் உள்ள ஷான்ஜி மகாணத்தை முற்றிலும் முடக்கியுள்ளது. சுமார் ஒரு கோடி மக்கள் தற்போது லொக்டவுனில் உள்ளனர். மேலும், பீஜிங்கில் உள்ள ஜிம் மற்றும் நீச்சல் குளங்களை மூட உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவை ஒழித்துவிட்டோம் என பெருமூச்சுவிட்ட சீனாவுக்கு, இந்த விவகாரம் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவில் மீண்டும் கொரோனா -ஜிம், நீச்சல்குளங்கள் பூட்டு - லொக்டவுனில் 1கோடி மக்கள் - Reviewed by Author on April 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.