அண்மைய செய்திகள்

recent
-

“கொரோனாவும் 2020 ஆம் ஆண்டும்”

உலக மக்கள் யாவர்க்கும் இரண்டாயிரத்து இ௫பதாம் ஆண்டு, எம் கன்னத்தில் அறைந்து  காலம் சொல்லும் கொரோனாவின் பாடமடா இது!

ஊற்றிவைத்த பாத்திரத்தில் உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல்
அடங்கிக் கிடக்கின்றோம் நாம் அவரவர் அறைகளில், இது கட்டாய சுகம் தானா? இல்லை விடுதலை சிறையா?

எம் மரணம், அவரவர் வீட்டு வாசலுக்கு வந்து
அழைப்புமணி அடிக்கும் வரைக்கும் எம் காதுகள் கேட்கப்போவதில்லை மனிதர்கள் யாவர்க்கும்.

எம் தமிழ் பறவைகளின் ஓசைகள் யாவும்
தத்தம் தாய்மொழியில் பேசுவதைக் கேட்பதெல்லாம் இந்த ஊரடங்கில்தான்
இவ்வளவு அழகோ?

விற்பனைக்குத் தயாரிக்கப்படும் அமைதியான அதிகாலைகள் வாங்குவாரற்று
நமக்கே சொந்தமாகிப் போயின!

இதுவரை நாம் தேடிச் சென்ற பயணம் எல்லாம் எம் உறவுகளைத்தானே...
இப்போது எம் கைகளை மட்டும்தான்
கழுவுகிறோம்!

எம் மக்களே அச்சத்திலிருந்து அறிவு தயாரிப்போம்
கொரோனா யுத்தத்திலி௫ந்து நாமும் சற்றே மறைந்தி௫ந்து போர் புரிவோம்
மரண பயத்திலி௫ந்து கொரோனாவுக்கு ம௫ந்து தயாரிப்போம்

கொரோனாவால் மனிதர் மரிக்கலாம்
ஆனால் எம் மனிதகுலம் மரித்துப் போகாது
எம் மானிடர்களே மாண்டவர்களை விடுங்கள்
எஞ்சி இ௫க்கும் பட்டினிச் சாவின் முகங்களைப் பா௫ங்கள்

பட்டினிச் சாவின் காதுகளுக்கு கொரோனாவின் சொற்கள் புரியாது
பூமியின் உயரத்தில்
ஏறி நின்று சத்தமிடுவோம் கொரோனாவே எம் மக்களை விட்டு விடு.

ஆக்கம் கண்ணீ௫டன்
மலரவள்!

“கொரோனாவும் 2020 ஆம் ஆண்டும்” Reviewed by Author on April 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.