அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானத்தின் மடுப்பிரதேச 2ம் கட்ட நிவாரணப் பணிகள்-படங்கள்

மன்னார் பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானத்தில் சித்திரை மாதம் இடம்பெற இருந்த உற்சவத்தை இரத்து செய்து நித்தியபூசை போன்று பத்து நாளும் நடத்தப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு உபயகாரரும் இந்த கொரானாவின் பாதிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உபயகாரர்கள் பத்து பேரும் நிவாரண பணிக்கு ஆளுக்கு ஐம்பதினாயிரம் ரூபாவாக ஐந்து இலட்சம் ரூபாய் மனமுவந்து கோயில் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டதனால்  அந்த நிதியுதவியை வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2000 ரூபாய் பெறுமதியான் உலர் உணவு பொருட்கள் இரண்டு கட்டமாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.

மடு பிரதேச செயலாளர் பிரிவில்  300 குடும்பங்களில் 175 குடும்பங்களுக்கும்   முதற்கட்டமாக மன்னார் பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானத்தினால் வழங்கப்பட்டது.

மடுப்பிரதேச 2ம் கட்ட நிவாரணப் பணிகள் கடந்த தினத்தில்
மடுப்பிரதேசத்தில் எந்தவிதமான் உதவியும் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களை  மடுப்பிரதேச சைவப்பேரவையின் தலைவர் திரு நாகேந்திரன் மற்றும் செயலாளர் திரு சுகந்தன் இருவரும் கிராமம் கிராமமாக சென்று தெரிவு செய்யப்பட்ட  அந்த 300 குடும்பங்களை கொண்ட பட்டியலில் இருந்து முதற்கட்டமாக  வழங்கி விடுபட்ட மிகுதியான 177 குடும்பங்களுக்கு
  •  கீரிசுட்டான் -11
  • இரணைஇலுப்பைக்குளம் -20
  • முள்ளிக்குள்ம்  -30
  • சின்னவலையன் கட்டு-20
  • விளாத்திக்குளம்-21
  • மண்கிண்டி 20
  • பூசாரிக்குளம் -20
  • கல்மடுபடிபம் -15
  • பரசன்குளம் 20 கிராமங்களைச்சேர்ந்த மக்களுக்கு இரண்டாம் கட்டமாக உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இவ்மனிதநேயப்பணியில் மன்னார் பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானத்தினருடன் இணைந்து மடுப்பிரதேச சைவப்பேரவையின் தலைவர் திரு நாகேந்திரன்,செயலாளர் திரு சுகந்தன் மற்றும் உறுப்பினர்கள் களப்பணியினை மேற்கொண்டனர்.










மன்னார் பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானத்தின் மடுப்பிரதேச 2ம் கட்ட நிவாரணப் பணிகள்-படங்கள் Reviewed by Author on April 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.