அண்மைய செய்திகள்

recent
-

36,000 ஊழியர்களை இடைநீக்கம் செய்யும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்! கொரோனா இழப்பு:


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 36,000 ஊழியர்களை இடைநீக்கம் செய்ய பிரிடிஷ் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட செய்தியில், கொரோனா நெருக்கடி காரணமாக விமானங்கள் தற்காலிகமாக இயக்காமல் இருக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், இந்த பணிநீக்கம் தொடர்பாக ஒரு வாரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதில், அந்நிறுவனத்தின் விமான கேபின் குழு உறுப்பினர்கள், பொறியாளர்கள், தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்ற பணியாளர்கள் என 80 சதவீத ஊழியர்களை இடை நீக்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த ஊழியர்களுக்கு அரசின் கொரோனா வைரஸ் திட்டத்தின்படி 80சதவீதம் ஊதியம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.

36,000 ஊழியர்களை இடைநீக்கம் செய்யும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்! கொரோனா இழப்பு: Reviewed by Author on April 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.