அண்மைய செய்திகள்

recent
-

இலண்டன் சிவன் நற்பணி மன்றம் (லூசியம்) மன்னார் செல்வ நகர் கிராமத்தின் 49 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்-படங்கள்

மன்னார் மாவட்ட இந்து ஆலயங்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்
இலண்டன் சிவன் நற்பணி மன்றம் (லூசியம்) வழங்கிய நிதி பங்களிப்பில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் செல்வ நகர் கிராமத்தில் 20.04.2020 திங்கட்கிழமை காலை 7 மணிக்கு செல்வநகர் முத்து மாரியம்மன் அறநெறி படசாலையில் வைத்து 49 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்  வழங்கப்பட்டது.

தாய்சேய் நலத்தை கருத்தில் கொண்டு தெரிவுசெய்யப்பட்டஅங்கு வசிக்கும் 49 குடும்பங்கள் கற்பிணி தாய்மார்களுக்கும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கும் அவர்கள் கேட்டு கொண்டதிற்கினங்க வழமையான உலர் உணவு பொருட்களுடன் சமபோசா சத்துணவும் விஸ்கட் மற்றும் அங்கர் பால்மா பெட்டிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்கள் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன், பொருலாளர் வைத்திய கலாநிதி ஆ.அரசக்கோன்,செல்வநகர் முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர் சபை தலைவர் ,உறுப்பினர்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ,செயலாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

செல்வநகர் முத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களினதும் மக்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்வு நிறைவுற்றது   இலண்டன் சிவன் நற்பணி மன்றத்தின்(லூசியம்) இப்பணிகள் இத்துடன் முடிவடையாது அயல் கிராமங்களுக்கும் தொடர இருக்கிறது.













இலண்டன் சிவன் நற்பணி மன்றம் (லூசியம்) மன்னார் செல்வ நகர் கிராமத்தின் 49 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்-படங்கள் Reviewed by Author on April 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.