அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்- அரச ஓய்வூதியம் பெறும் முதியவர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஒழுங்கு

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக ஓய்வு ஊதியம்  பெறும் முதியவர்கள் தங்களுடைய ஓய்வூதிய பணத்தை வங்கிகளில் இருந்து பெற்றுக்கொள்வதற்காக விசேட ஏற்பாடுகள் இன்று இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 ஓய்வூதியம் பெறும் முதியவர்களுக்கு என விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட அரச பேரூந்துகளில் பிரத்தியோக பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக முதியவர்கள் தங்களுடைய ஓய்வூதிய பணத்தை பெற்றுக்கொள்வதற்காக மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் சேர்ந்த முதியவர்கள் இராணுவத்தினரின் உதவியுடன் இன்றையதினம் அவர்களுக்குரிய வங்கிகளுக்கு அழைத்து வரப்பட்டனர்.

 ஓய்வூதியம் பெறவருகை தரும் முதியவர்களுக்கான விசேட ஒழுங்குகள் வங்கிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது அழைத்து வரப்பட்ட முதியவர்கள் ஓய்வூதிய பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் தங்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.



மன்னார்- அரச ஓய்வூதியம் பெறும் முதியவர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஒழுங்கு Reviewed by Author on April 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.