அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு சட்ட விரோத துப்பாக்கி வைத்திருந்த தந்தை மகன் கைது -படங்கள்

மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய குஞ்சுகுளம் கிராமத்தில் இரண்டு  சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் தந்தை மகன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 27-04-2020  இரவு பத்து மணியளவில் மடு போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த சட்ட விரோத உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 25 வயது  மகனும் 50 வயதுடைய  தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்ட இருவரும்  மடு பொலிசாரின் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

குறித்த சுற்றி வளைப்பு நடவடிக்கையில் மடு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  உதவி பொலிஸ் அத்தியட்சகர்  நிரோஷன் பி.எஸ்.செனவிரெத்ன ஜெயவர்த்தன திசநாயக்க விதுஷான் பிரியதர்சன் ஆகியோர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/CzoncQ0PHPM

மன்னார் மடு சட்ட விரோத துப்பாக்கி வைத்திருந்த தந்தை மகன் கைது -படங்கள் Reviewed by Author on April 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.