அண்மைய செய்திகள்

recent
-

இராணுவத் தளபதியும், பொலிஸ்மா அதிபரும் நிபுணர்களா? மக்கள் உயிருக்கு ஆபத்தாக அமையலாமென எச்சரிக்கை -


வைரஸ் தாக்கம் முடிந்து விட்டதாக கூறுகின்றார்கள். ஊரடங்கு சட்டத்தினை நாளையிலிருந்து எடுப்பதற்கு தீர்மானித்து உள்ளார்கள்.
இதனை செய்ய வேண்டியது அரசியல்வாதிகள் அல்ல, நிபுணர்கள் என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாளைய தினம் கொழும்பில் கூட்டமொன்று இடமெ்பெறவுள்ளது. அதற்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்திற்கு வருபவர்கள் யார் என்று பார்த்தால் இராணுவத் தளபதியும், பொலிஸ்மா அதிபரும். இவர்களா நிபுணர்கள்?

நாங்கள் மூவர் ஆணைக்குழுவில் இருக்கின்றோம். எங்களின் மூவருக்கும் மருத்துவம் தொடர்பில் எந்தவித அறிவும் கிடையாது.

நாங்கள் சரியான நிபுணர்களிடம் மாத்திரமே கேட்க வேண்டும். அரசாங்கம் சொல்வதுபோல் செய்வதற்கில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மாதிரியான நிலையில் நாம் வேடிக்கையாக தேர்தலை நடத்தினால் ஒன்று மக்கள் வாக்களிக்க வராமல் விடலாம். இது அவர்களின் வாக்குரிமையை மீறுவதாக அமையும்.
இல்லையென்றால் வாக்களிக்க வந்தார்கள் என்றால் அது அவர்களின் உயிருக்கு ஆபத்து. உடல்நிலையும் ஒரு அடிப்படை உரிமை. அதை கெடுப்பதாக அமையும் என எச்சரித்துள்ளார்.
இராணுவத் தளபதியும், பொலிஸ்மா அதிபரும் நிபுணர்களா? மக்கள் உயிருக்கு ஆபத்தாக அமையலாமென எச்சரிக்கை - Reviewed by Author on April 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.