அண்மைய செய்திகள்

recent
-

மருத்துவர்களை கௌரவிக்கும் விதத்தில் சச்சின் எடுத்த நல்ல முடிவு -


கொரோனா வைரசை எதிர்த்து போராடும் மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என அறிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 27 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,90,000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

நாளுக்கு நாள் இதன் கோரத்தாண்டம் அதிகரித்து வருகிறதால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது, இதனால் ஏழை மக்கள் அன்றாடம் உணவில்லாமல் தவித்து வருகின்றனர்.

பொருளாதார ரீதியாக மக்களுக்கு உதவ அரசியல், விளையாட்டு, சினிமா என பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த பொருள் மற்றும் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஏப்ரல் 24ம் திகதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என அறிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இம்முடிவை எடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மருத்துவர்களை கௌரவிக்கும் விதத்தில் சச்சின் எடுத்த நல்ல முடிவு - Reviewed by Author on April 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.