அண்மைய செய்திகள்

recent
-

மே 24, ஞாயிறு, மற்றும் மே 25, திங்கள், ஆகிய இரு முழு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம்:

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

மே 24, ஞாயிறு, மற்றும் 25, திங்கள், ஆகிய இரு முழுத் தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை 23, சனி, இரவு 8.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 26, செவ்வாய் அதிகாலை 5.00 மணிக்கே தளர்த்தப்படும்.

அதன் பின்னர் - இந்த மாவட்டங்களில், ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோதும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் - நாளைய தினமும் (சனி) நடைமுறையில் இருக்கும்.

அதேநேரம் - மே 26, செவ்வாய், முதல் முன்னர் போன்று தொடர்ந்தும் அது முன்னெடுக்கப்படும்.

மற்றும்படி - முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஊரடங்கு சட்டத்துடன் தொடர்புடைய அறிவுறுத்தல்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை.
மே 24, ஞாயிறு, மற்றும் மே 25, திங்கள், ஆகிய இரு முழு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம்: Reviewed by Admin on May 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.