அண்மைய செய்திகள்

recent
-

ஊரடங்கு தொடர்பான புதிய நடைமுறை...


ஊரடங்குச் சட்டம் பற்றிய இன்றைய அறிவித்தல்.....
இலங்கை முழுவதும் எதிர்வரும் 31ஆம் திகதி  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.ஊரடங்கு சட்ட அமுலாக்கம் குறித்த புதிய அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளது.

ஜுன் 06ஆம் திகதி சனிக்கிழமை வரையிலும், மற்றும் அதன் பின்னரும் - நாட்டில் ஊரடங்கு சட்டம் பின்வருமாறு அமுல்படுத்தப்படும்.

மே 31, ஞாயிறு, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் - முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

ஜுன் 01, திங்கள், முதல் ஜுன் 03, புதன், வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று - இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

  ஜுன் 04, வியாழன், மற்றும் ஜுன் 05, வெள்ளி, ஆகிய இரு தினங்களும் - நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

  ஜுன் 06, சனி, முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று - இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

  கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும்
ஊரடங்கு தொடர்பான புதிய நடைமுறை... Reviewed by Author on May 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.