அண்மைய செய்திகள்

recent
-

உயர் தர மாணவர்களுக்காக நியாயமான தீர்மானம் எடுக்கப்படும்: பரீட்சைகள் ஆணையாளர்


கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்பதால், இந்த வருடத்திற்கான உயர் தரப்பரீட்சை தொடர்பாக ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளும் கல்வியமைச்சும் இணைந்து மாணவர்களுக்காக நியாயமான தீர்மானத்தை எடுப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.
மே அல்லது ஜூன் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியாமல் போனால், பாடங்களை பூர்த்தி செய்ய கூடுதலான காலம் தேவை. பாடங்களை முழுமையாக பூர்த்தி செய்தால் மாத்திரமே நியாயமான பரீட்சைகளை நடத்த முடியும்.
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் தரப் பரீட்சையில் 3 லட்சத்து 64 ஆயிரத்து 761 மாணவர்கள் தோற்ற உள்ளனர் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் தர மாணவர்களுக்காக நியாயமான தீர்மானம் எடுக்கப்படும்: பரீட்சைகள் ஆணையாளர் Reviewed by Author on May 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.