அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் றாசீக் பரீது மரணம்.

நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் றாசீக் பரீது தனது 62 ஆவது வயதில் இன்று 6-05-2020 புதன் கிழமை அதிகாலை உயிரிழந்தார். நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி உறுதிபடுத்தியுள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு றசூழ் புது வெளி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து முருங்கன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி இன்று புதன் கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில்; போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மன்னார் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் றாசீக் பரீது மரணம். Reviewed by Author on May 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.