அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவில் இடம் பெற்ற இரத்ததான முகாம்.........

நாட்டில் உள்ள இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் இன்று தள்ளாடி படை முகாமில் இரத்த தான முகாம் இடம் பெற்றது.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஏ.ஏ.ஐ.ஜே.பண்டர அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த இரத்ததான முகாம் இடம் பெற்றது.

இதன் போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை தந்திருந்தனர்.
தள்ளாடி படை முகாமில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் இடம் பெற்ற குறித்த இரத்ததான முகாம் சுமார் 150 இராணுவத்தினர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தனர்.

இதன் போது இரத்ததானம் செய்ய கலந்து கொண்ட இராணுவ வீரர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடை வெளிகளை பின் பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.










மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவில் இடம் பெற்ற இரத்ததான முகாம்......... Reviewed by Author on June 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.