அண்மைய செய்திகள்

recent
-

காணி கிளை அலுவலகம் மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைப்பு


மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கணி தொடர்பான தகவல்களை பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதற்கான சேவைகளை முன்னெடுக்கும் முகமாக UNHCR நிறுவனத்தின் நிதி உதவியுடன்  ஜசாக் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் அமைக்கைப்பட்ட காணிக்கிளைக்கான கட்டிட திறப்பு விழா நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை மதியம் 3 மணியளவில் மன்னார் நகர் பிரதேச செயளாலர் திரு ம.பிரதீப் தலைமையில் இடம் பெற்றது





குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சி.ஏ.மோகன்றாஸ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக UNHCR நிறுவனத்தின் வடமாகாண பொறுப்பதிகாரி திரு.வே.பிரபாகரன் மற்றும்  ஜசாக் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் UNCHER நிறுவன ஊழியர்கள் ஜசாக் நிறுவன ஊழியர்கள் உதவி அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் காணி உத்தியோகஸ்தர்கள் பிரதேச செயலக ஊழியர்கள் என பலரும் கலந்து கட்டிடத்தை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்ததுடன் கட்டிடத்தின் ஆவணங்களையும் வைபவரீதியாக பிரதேச செயலாளரிடம் வழங்கி வைத்தனர்

அதே நேரத்தில் குறித்த காணிக்கிளையின் ஊடாக எதிர் வரும் காலங்களில் மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள  மக்களின் காணி ஆவணங்கள் பெறுதல் காணி வழங்குதல் வீட்டுத்திட்டம் தொடர்பான தேவைகளை நேரடியாக பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடதக்கது


மன்னார் நகர் நிருபர்

30.06.2020
















காணி கிளை அலுவலகம் மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைப்பு Reviewed by Author on June 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.