அண்மைய செய்திகள்

recent
-

மரக்கிளை முறிந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி........

வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயிலடி பகுதியில் வேப்பமரம் முறிந்து விழுந்ததில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

பலத்த காற்றினால் வீதிக்கரையில் இருந்த வேப்பமரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த குழந்தை மற்றும் இரு சிறுமிகள் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எனினும் காயமடைந்திருந்த ஆயிலடியை சேர்ந்த மதுசன் லக்சாயினி என்ற குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.  ஜீவிதா (10), சர்மிலாதேவி (8) ஆகிய சிறுமிகள் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது........




மரக்கிளை முறிந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி........ Reviewed by Author on July 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.