அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி வாகனவிபத்தில் ஒருவர் பலி...

கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மன்னார் - யாழ் வீதியில்  நேற்று (23) இரவு 8.40 மணி அளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.  விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

வீதியில் தரித்து நின்ற பார ஊர்தியுடன் யாழ் நோக்கி பயணித்த வான் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பார ஊர்தியானது தரித்து நிற்பதற்கான எந்தவொரு சமிக்ஞையும் இல்லாத நிலையில் யாழ் நோக்கிய திசையில் நிறுத்தப்பட்டுள்ளது. அதே திசையில் பயணித்த வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய சுவேந்திரன் என்பவரே உயிரிழந்தவராவார். உயிரிழந்தவரின் சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை ஜெயபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன்மை குறிப்பிடத்தக்கது..



கிளிநொச்சி வாகனவிபத்தில் ஒருவர் பலி... Reviewed by Author on July 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.