அண்மைய செய்திகள்

recent
-

கருணா அம்மன் ஒரு ஆண் மகனாக இருந்தால் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்...!!!

வடக்கு-கிழக்கில் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர தமிழ் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள்   சிங்கள தேசத்தை எதிர்த்து கருத்துச் சொல்வது என்று தெரியவில்லை.ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப் படுத்துகின்ற  அவர்களின் வார்த்தைகள், அவர்களுடைய செயல்பாடுகள் அமைந்து உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை(3) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியை தெரிவு செய்து விட்டோம். ஆகவே வடக்கு கிழக்கிலே எங்களுடைய ஆளுமை  தொடரும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ  சொல்லியிருக்கிறார்.இதிலிருந்து ஒரு செய்தியை நாங்கள் உணர வேண்டும். 
வடக்கு கிழக்கிலே மொட்டு சின்னத்திற்கு ஆதரவாக களம் இறக்கப் பட்டிருக்கிற சுயேச்சைக் குழுவில் இருக்கிற தமிழர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன்.

சிங்கள தேசத்தின் தலைவராக பேசிக் கொண்டிருக்கின்ற மஹிந்த ராஜபக்சவிற்கு தமிழர்களாகிய நீங்கள் வாக்கெடுத்து கொடுக்கப் போகிறீர்களா? என்பது எனது கேள்வி.

 மிகவும் ஒரு இனத் துவேசத்தை பேசிக் கொண்டிருக்கிற இந்த நிலையிலேயே தமிழர்களும் சேர்ந்து அதில் போட்டியிடுகின்ற அத்தனை பேரும் சேர்ந்து  சிங்கள தேசத்துக்கு எங்களுடைய தமிழர்களின் வாக்குகளை  பெற்றுக் கொடுக்க எப்படி உங்களுக்கு மனசாட்சி வேலை செய்கிறது என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

வடக்கு கிழக்கில் குறிப்பாக களமிறக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர தமிழ் கட்சிகள் அவர்கள் சிங்கள தேசத்தை எதிர்த்து கருத்துச் சொல்வது என்று தெரியவில்லை.

 தமிழ் தேசியக் கூட்டமைப்பை தான் என்ன செய்தது? அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்பை பலவீனப் படுத்துகின்ற  அவர்களின் வார்த்தைகள், அவர்களுடைய செயல்பாடுகள் அமைந்து உள்ளது.

 நான் அவரிர்களிடம் கேட்கின்றேன் உங்களிடம் என்ன கொள்கை இருக்கின்றது.
உங்களுடைய கொள்கை என்ன?   நீங்கள் மக்களுக்கு என்ன சேவையாற்ற போகிறீர்கள் என்பதை மட்டுமே   நீங்கள் சொல்லுங்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைபை சொல்லி தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெறுவதற்காக ஏனையவர் சிங்கள தேசத்தில் இருந்து வந்து செய்பவர் போன்று நீங்கள் செய்வது ஒரு விதத்தில்   தமிழர்களுடைய வாக்குகளைக் குறைப்பதற்கான அல்லது பிரிப்பதற்கான ஒரு முயற்சியை மேற்கொண்டு வருகின்றீர்கள்.

 தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக அதனுடைய நடவடிக்கை சரியில்லை என்று சொன்னவர்கள் நீங்கள் உங்களுடைய கொள்கை என்ன?  உங்களுடைய செயல்பாடு என்ன? மக்களுக்கு என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் சொல்லி மக்களிடம் வாக்கு கேளுங்கள்.கூட்டமைப்பை அடித்து கேட்க வேண்டாம்.

-கருணா மிகவும் மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார்.   அவருடைய கருத்துக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்கு நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன்.

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாகவும்,மாதுபான சாலைகள் இருப்பதாகவும் கருணா அம்மன் மிக மோசமாக கருத்துக்களை கூறி வருகின்றார்.

உண்மையிலேயே அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் அவர் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்.
அப்படி ஆதாரத்தோடு அவர்கள் நிரூபித்தால் இந்த நிமிடமே நான் இந்த தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன்.அரசியலில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ள தயாராக இருக்கின்றேன்.

போலி முகநூலில் பதிவிடுகின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு ஒரு பொறுப்பான நிலையில் இருக்கின்றதாக கூறிக்கொள்ளுகின்ற  கருணா இப்படியான கருத்துக்களை சொல்லக்கூடாது.

 ஆகவே மீண்டும் சொல்லுகிறேன் அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் என்னுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். அவர் அதனை நிரூபித்தால் அடுத்த நிமிடமே நான் என்னுடைய நாடாளுமன்ற போட்டியிலிருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

நானும் ஒரு போராளி.என்னுடைய எண்ணத்தை வலுவாக்கி அல்லது எனது இனத்தை நாசமான ஒரு சூழலில் கொண்டு சென்று வாக்குக் கேட்பது என்பது எனக்கு உகந்ததல்ல.

ஏனென்றால் நான் ஒரு விடுதலைக்காக சென்றவன். அந்த வகையில் எங்களுடைய   மக்களை மிகவும் மோசமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லுகின்ற செயற்பாட்டில்   எனது மனசாட்சி ஒரு போதும்   இடம் கொடுக்காது.
எனது உடலில் ஓடுகிறது தன்மான தமிழனின் இரத்தம்.

ஆகவே என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
நான் விடுதலைக்காக வந்தவன். காசு பணத்துக்காக இப்படியான ஒரு செயலை செய்யப் போவதில்லை.
கருணா அம்மன் ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும்.
நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இருந்து ஒரு போதும் காட்டிக் கொடுக்கவில்லை.

எங்களுடைய முப்படைகளையும் கொண்ட எங்களுடைய காவலர்களாக இருந்தவர்களை  சர்வதேசத்தோடும் இராணுவத்துடனும் சேர்ந்து கருணா அம்மான் எங்களுடைய இந்த இந்த பலத்தை அளித்தவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.அதை நாங்கள் நிரூபிக்க முடியும்.

பாராளுமன்ற ஹன்சாட்டில் பார்த்தால்   மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களை அவன் , இவன் என்று பேசிய பதிவுகள் உள்ளது.
அதனை என்னால் நிரூபிக்க முடியும்.தற்போது தேர்தலுக்காக வந்து  வந்து தலைவர் என்று மரியாதையாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்.


ஏனென்றால் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் தற்போது அவ்வாறு பேசுகின்றார்.
 ஒரு முறை நான் சொன்னேன் தலைவரை பற்றி அவன் இவன் என்று   பேச வேண்டாம். துலைவர் உங்களில்  சரியான மரியாதை வைத்திருக்கிறார்.

 ஆகவே   அந்த வகையில்   அவன் இவன் என்று சொல்ல வேண்டாம் என்று நான்   பாராளுமன்றத்தில் வைத்து அவரை தனியாக அழைத்து சொன்னேன்.அதற்கான உதாரணத்தையும் சொன்னேன்.

கருணா அம்மன் பிரச்சனை பட்டுப்போன போது தமிழ்ச்செல்வன்  கூறினார்; இந்த படங்களை எடுக்க வேண்டும் என்று. இதன் போது தலைவர் அவர்கள் கூறினார்  ஆணையிரவு சமர் மற்றும் பல சமரில் கரணாவின் வரலாறு பதிந்திருக்கின்றது. ஆகவே அதை எடுக்க முடியாது என்ற செயற்பாட்டை அவர் சொன்னார்.

அப்படியான ஒரு மேதகு தலைவர் அவர்களை கருணா அம்மன் பாராளுமன்றத்தில் அவன் இவன் என்று   மஹிந்த ராஜபக்ஸவிற்கு  வக்காலத்து வாங்குவதற்காக அவருடைய காலை வருடுவதற்காக இப்படியான கருத்துக்களை சொல்லியிருக்கிறார்.அதனை ஹன்சாட் மூலம் என்னால் நிரூபிக்க முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் எங்களுடைய மக்களுடைய விடுதலையை மறுத்து செயல் படாது. ஏங்களுடைய செயல்பாடுகள் அத்தனையும் எங்களுடைய மக்களுக்காகத் தான் இருக்கும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  உருவாக்கம் ஒரு புனிதமான செயற்பாட்டின் ஊடாக உருவாக்கப்பட்டது.ஆகவே அந்த செயல் பாட்டைத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யும் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
தற்போதுள்ள இனவாதிகளுக்கு நாங்கள் பாடம் படிப்பிக்க வேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலமாக அரணாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகின்ற சந்தர்ப்பம் நிச்சயமாக வரும்.

அப்பொழுது தான் நாங்கள் இப்பொழுது இருக்கின்ற இராணுவத்தை வைத்துக் கொண்டு எங்களுடைய வடக்கு கிழக்கில்  செயல்பட நினைத்தவர்களை நாங்கள் ஓரங்கட்ட முடியும். அவர்களுக்கு பதில் சொல்லவும் முடியும்.

ஆகவே மக்கள் நிதானமாக தங்களுடைய செயற்பாட்டை கட்டாயம் செய்வார்கள். ஏனையவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் பறந்து போகும். எங்களுடைய சக்தியாக உருவாக்கப்பட்டதன் நிலைப்பாடு சம்பந்தமாக மக்கள் எங்களுடன் நிச்சயமாக இருப்பார்கள்.

அந்த வகையிலே எந்த மாற்றுக்கருத்தும் எங்களுக்கு இல்லை. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்களிடமிருந்து பலவீனப்படுத்தி விட்டோம் என்று சொல்லுகின்ற அதிலேயே எங்களை எதிர்த்து போட்டியிடுகின்ற அத்தனை பேரும் மக்களால் புறக்கணிக்கப் படுவார்கள் என்பது வரலாறு சொல்லும்...



கருணா அம்மன் ஒரு ஆண் மகனாக இருந்தால் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்...!!! Reviewed by Author on July 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.