அண்மைய செய்திகள்

recent
-

மின்சாரக் கட்டணங்களுக்கு 25 % சலுகை....!!! இனி மின் துண்டிப்பு இடம்பெறாது .........

கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட முடக்கநிலை காரணமாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரலுக்கான மின்சாரக் கட்டணங்களில் 25 %தை குறைப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

அத்துடன், இந்த நிவாரணங்கள் குறையாது என்பதுடன் 25 % விலைப் பட்டியல் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று  இடம்பெற்ற நிலையில் அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனைவிட மின் துண்டிப்பு இடம்பெறாது எனவும் நிலுவைப் பணம் அறவிடப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ள பந்துல குணவர்தன, இதனால் ஏற்படும் நட்டத்தை இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார்........

இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் மின்சாரத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தமது அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் மின் கட்டணம் குறையுமே தவிர அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் பந்துல குணவர்தன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..


மின்சாரக் கட்டணங்களுக்கு 25 % சலுகை....!!! இனி மின் துண்டிப்பு இடம்பெறாது ......... Reviewed by Author on July 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.