அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வட பிராந்திய முகாமையாளரை எதிர் வரும் 27 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவு.

 மன்னாரில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வட பிராந்திய முகாமையாளரை எதிர் வரும் 27 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவு.


(மன்னார் நிருபர்)

(19-08-2020)

மன்னாரில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளரை இன்று புதன் கிழமை(19) மாலை மன்னார் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மன்றில் முன் வைத்த விண்ணப்பங்களை பரிசீலினை செய்த நீதவான் குறித்த நபரை எதிர் வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு, எதிர் வரும் 27 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு உத்தரவிட்டார்.

இலங்கை அரச போக்கு வரத்து சேவையின்  வட பிராந்திய முகாமையாளர் நபர் ஒருவரிடம் முறைப்பாடு ஒன்றை சீர் செய்வதற்கு என 60 ஆயிரம் ரூபாய் பணத்தை மன்னாரில் வைத்து இன்று புதன் கிழமை (19) காலை இலஞ்சமாக பெற்ற நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வட பிராந்திய முகாமையாளரை எதிர் வரும் 27 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவு. Reviewed by Admin on August 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.