அண்மைய செய்திகள்

recent
-

பொதுத்தேர்தலை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமுல்......

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலியா சேனரத்ன தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலினை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஜாலியா சேனரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் கடமைகள் முடியும் வரை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சோதனைச் சாவடிகள் நாடு முழுவதும் இருக்கும்” என
அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...
.




பொதுத்தேர்தலை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமுல்...... Reviewed by Author on August 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.