அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்

பிழையான பாதையில் அரசு பயணித்தால் ஐ.தே.கவின் நிலையே ஏற்படும்.

சிங்கள மேலாதிக்க அதிகாரத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் தனது கன்னி உரையை நீதியரசர் நிகழ்த்தினார்.

9ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய பின்னர் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வாழ்த்து தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் உரையாற்றினார்.


தனது பேச்சை தமிழில் ஆரம்பித்த நீதியரசர் விக்னேஸ்வரன், உலகில் உயிர் வாழும் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் என்றும் இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ் என்றும் அந்த தமிழ் மொழியில் தனது உரையை ஆரம்பிப்பதாகவும் கூறி பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றி சிங்கள மொழியில் தனது உரையை நிறைவு செய்தார்.


விக்னேஸ்வரனின் உரையில்,


இன்றைய அரசாங்கம் மிகவும் பலமான நிலையில் இருக்கிறது என்று சுட்டிக் காட்டி அதேபோல மறைந்த ஜே.ஆர். ஜெயவர்தனவின் கீழ் யானைப் பலத்துடன் 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தை ஏற்படுத்தி இன்று ஒரே ஒரு உறுப்பினர் எனும் அளவுக்கு அதன் பலம் சுருங்கிவிட்டதாக தனதுரையில் கோடிட்டு காட்டிய நீதியரசர் விக்னேஸ்வரன் அதே பிழையை தற்போதைய பொதுஜன பெர முன அரசும் அதே பாதையை தெரிவு செய்யாது என்று நம்புவதாக கூறினார்.


கடந்த காலத்தில் நாம் விட்ட பிழைகளில் இருந்து பாடம் படித்து எல்லா சமூகங்களும் ஒருவருக்கு ஒருவர் மதிப்புடனும் சமனாகவும் உணருகின்ற வகையிலும் இலங்கை தாய் நாட்டின் பிள்ளைகள் நாம் என்ற இறைமையுடனும் பெருமையுடனும் நடைபோடும் வகையிலுமான சமாதானமும் செழிப்பும் மிக்க ஒரு காலத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன்.” என்று கூறினார்.


தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை பற்றி அழுத்தம் திருத்தமாக தனது உரையில் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.


“குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையுடன் மரபு, பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக்கப்படுவதன் பிரகாரம் சுய நிர்ணய உரிமைக்கு உரித் துடைய வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்றுக் கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும்” என்று கூறினார்.


சிங்கள மேலாதிக்க அதிகாரத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை

என்பதையும் நீதியரசர் தனது இந்த உரையில் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.


பௌத்த மதத்தை பின்பற்றும் ஒரு நாட்டிலே, மேலாதிக்க அதிகார பிரயோகத்தை நாங்கள் எவரிடம் இருந்தும் எதிர்பார்க்க வேண்டியதில்லை.


ஏனென்றால், சிங்கள கிராமத்தவர் கள், ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும் என்பதற்காக பின்வரும் பழமொழியை கூறுவார்கள் என்பது எமக்கு தெரியும்.


அதாவது, (கல கல டே பல பல வே) முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்பதே அது என்று கூறினார்.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் Reviewed by Author on August 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.