அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டம் ஆரம்பம்

வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்களான வட.மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் குலசிங்கம் திலீபன் தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் தற்போது ஆரம்பமாகி, நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 இன்றைய அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியூதீன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கே.கே.மஸ்தான், பிரதம செயலாளர் அ.பத்திநாதன், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக்டிறஞ்சன், மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸார் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

 குறித்த கூட்டத்தில், பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தீர்க்கப்படாத முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.


வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டம் ஆரம்பம் Reviewed by Author on September 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.