மன்னார் பஸார் பகுதியில் பொலிஸ் வாகனம் மோதி சிறுமி உற்பட மூவர் காயம்
குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 9.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னார் பகுதிக்கு மோட்டார் சைக்கிலில் வந்தவர்களும், மன்னார் பஸார் பகுதியூடாக பயணித்த பொலிஸாரின் வாகனமும் மோதியே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 67 வயதுடைய கணவன் அவருடைய மனைவி மற்றும்,அவர்களுடன் வருகை தந்த 6 வயது சிறுமி ஆகியோர் காயங்களுக்கு உள்ளான நிலையில் உடனடியாக மக்களின் உதவியுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன்.
சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,வீதி போக்கு வரத்து பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளதோடு, குறித்த பொலிஸ் வாகனத்தினை ஓட்டி வந்த பொலிஸ் சாரதியிடம் மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பஸார் பகுதியில் பொலிஸ் வாகனம் மோதி சிறுமி உற்பட மூவர் காயம்
Reviewed by Author
on
October 20, 2020
Rating:
No comments:
Post a Comment