முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற நவராத்திரி விழா!
இந் நிகழ்வில் வரவேற்பு நடனம் வழங்கிய மாவட்ட செயலக உத்தியோகத்தரின் மகள் உட்பட கலந்துகொண்ட உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பரிசில் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.
வாணி விழா நிறைவின் பின்னர் கிளை ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்று வருகின்ற பூசை வழிபாடுகளின் இன்றைய தினத்திற்குரிய பூசை வழிபாடுகளின் நிறைவில் பிரசாதங்கள் மற்றும் அன்னதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பக்தி பூர்வமாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற நவராத்திரி விழா!
Reviewed by Author
on
October 24, 2020
Rating:
No comments:
Post a Comment