அண்மைய செய்திகள்

recent
-

பெற்றோரின் சடலங்களுடன் மூன்றுநாட்கள் உயிர்வாழ்ந்த பச்சிளம் குழந்தைகள் - நெஞ்சை உலுக்கிய துயரம்

விஷம் கலந்த ஊறுகாய் சாப்பிட்டு இறந்த பெற்றோரின் சடலங்களுடன் இரண்டு சிறு குழந்தைகள் மூன்று நாட்கள் உயிருடன் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் ரஷ்யாவின் லெனின்கிராட் ஒப்லாஸ்டில் உள்ள தொடர்மாடி வீட்டில் இடம்பெற்றள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் அலெக்சாண்டர் (30வயது) மற்றும் விக்டோரியா யாகுனின் (26வயது) ஆகியோர் குறித்த தொடர் மாடி வீட்டில், தமது ஐந்து வயது பெண் குழந்தை மற்றும் ஒரு வயது ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். 

  குறித்த தம்பதியினர் உட்கொண்ட ஊறுகாய் விஷமானதையடுத்து அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.இதனையடுத்து குழந்தைகள் இருவரும், மூன்று தினங்கள் சடலங்களுடன் இருந்துள்ளனர். இதனிடையே விக்டோரியா யாகுனின் உறவினர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண் குழந்தை அதற்கு பதில் அளித்துள்ளார்.

  இதன் போது, தமது தாய் மற்றும் தந்தை நீண்ட நேரம் 'தூங்கிக் கொண்டிருக்கிறான்' 'தாயின் உடல் அனைத்தும் கறுப்பாக மாற்றிவிட்டது' என்றும் அந்த குழந்தை பதிலளித்துள்ளார். இதனையடுத்து சந்தேகித்த உறவினர் வீட்டிற்கு வந்துள்ளதுடன் பொலிஸாரின் உதவியுடன் குழந்தைகளை மீட்டுள்ளார். மூன்று தினங்களும் ஐந்து வயது பெண்குழந்தை தமது ஒரு வயது சகோதரனை பராமரித்து வந்துள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளனர்.

பெற்றோரின் சடலங்களுடன் மூன்றுநாட்கள் உயிர்வாழ்ந்த பச்சிளம் குழந்தைகள் - நெஞ்சை உலுக்கிய துயரம் Reviewed by Author on October 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.