5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்!
இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 75000 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இதன் முதற்கட்டமாக இன்று முதல் மினுவங்கொடை – திவுவலபிட்டி, அத்தனகல்ல மற்றும் மீரிகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட 72 ஆயிரத்து 345 பேருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் பின்னர், அந்தப் பகுதியில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கம்பஹா மாவட்டத்தின் 19 பொலிஸ் அதிகார பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இதனால் குறித்த பகுதியில் வசிக்கும் வறியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 14 ஆம் திகதி கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்தினால் நிதியமைச்சில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நிவாரணம் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்!
Reviewed by Author
on
October 20, 2020
Rating:
No comments:
Post a Comment