அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பட்டிதோட்டம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

மன்னார் பட்டிதோட்டம் கிராமத்தில் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பங்களில் நாட்கூலி தொழிலாளர்களைக் கொண்ட 18 குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தினால் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் முககவசங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

 மன்னார் மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் வேண்டுகோளுக்கு அமைவாக மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தினால் உலர் உணவுப்பொருட்கள் மற்றும் முககவசங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிவாரணப் பொதியானது இன்று வியாழக்கிழமை காலை மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் அவர்களிடம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் ஏ.திலீபன் வழங்கி வைத்தார்.

 மேலும் குறித்த நிவாரணப்பொதியானது தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எஸ்.திலிபன் மற்றும் மன்னார் பிரதேச திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் றொகான் ஆகியோர் குறித்த கிராமத்தின் மாதார் அபிவிருத்தி சங்கத்திடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



மன்னார் பட்டிதோட்டம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு. Reviewed by Author on October 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.