அண்மைய செய்திகள்

recent
-

அடுத்த வருடத்தில் 2 இலட்சம் சுயதொழில் வேலைவாய்ப்பு

அடுத்த வருடத்தில் 2 இலட்சம் சுயதொழில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் சமுர்த்தி முகாமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

 சமுர்த்தி பெறுநர்களின் ஜீவனோபாய மார்க்கத்தை கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கொண்டு வரும் வேலைத்திட்டத்தின் தலைமைத்துவம், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதாக பசில் ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டுள்ளார். சமுர்த்தி, பொருளாதார, நுண் நிதி, சுயதொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்தில் 2 இலட்சம் சுயதொழில் வேலைவாய்ப்பு Reviewed by Author on December 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.