அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் தோமஸ்புரி பகுதியில் கடமையாற்றும் கிராம சேவகர் நீராட சென்ற நிலையில் மாயம்

தோமஸ்புரி பகுதியில் கடமையாற்றும் கிராம சேவகர் மாயம் மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தோமஸ்புரி கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகர் ஆற்றில் நீராட சென்ற நிலையில் மாயமாகியுள்ளார்.

 மன்னார் அரிப்பு பாலப்பகுதியின் கீழ் அருவி ஆற்றில் நீராட சென்ற ஐந்து கிராம சேவகர்கள் நீரடிய நிலையில் அதிக நீர் வரத்து காரணமாக நீர் பாதையில் அடித்து செல்லப்பட்டுள்ளனர் விடயம் அறிந்த மக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் மேற்கொண்டுணட நிலையில் நான்கு கிராம சேவகர்கள் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 எனினும் தோம்ஸ்புரி பகுதியில் கடமையாற்றும் கிராம சேவையாளர் இதுவரை மீட்கப்படாத நிலையில் அவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.







மன்னார் நானாட்டான் தோமஸ்புரி பகுதியில் கடமையாற்றும் கிராம சேவகர் நீராட சென்ற நிலையில் மாயம் Reviewed by Author on December 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.