கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரையோரத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
இதேவேளை அவரிடமிருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அவருடைய மோட்டார்சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது
Reviewed by Author
on
January 23, 2021
Rating:
No comments:
Post a Comment