அண்மைய செய்திகள்

recent
-

விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி

மட்டக்களப்பு, வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியின் மியான்குளப் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (06) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பைச் சேர்ந்த 31 வயதுடைய பரமேஸ்வரன் தனுஜன், 31 வயதுடைய டினேகா என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 கொழும்பில் இருந்து குறித்த நபர் நேற்று இரவு அவரது உறவினரான பெண் ஒருவரை ஏற்றிக் கொண்டு மட்டக்களப்பு நோக்கி காரில் பிரயாணித்துள்ளனர். இந்த நிலையில் வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியின் மியான்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பட்டை மீறி கார் வீதியை விட்டுவிலகி தடம்புரண்டு மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அந்த பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினர் அங்கு சென்று உயிரிழந்த நிலையில் இருவரையும் காரில் இருந்து மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

.
விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி Reviewed by Author on May 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.