அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் பாரிய மரக் கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிப்பு

வவுனியா – நைனாமடுபகுதியில் முன்னெடுக்கப்பட்ட மரக் கடத்தல் நடவடிக்கை பொலிஸாரால் முறியடிக்கப்பட்டது. வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடு பகுதியில் மரக் கடத்தல் இடம்பெறுவதாக புளியங்குளம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது அதனையடுத்து, இன்று (02) அதிகாலை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது கருங்கற்களுக்குள் மறைக்கப்பட்டு கடத்திச்செல்ல முற்பட்ட 43 முதிரைக் குற்றிகளையும் 2 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றினர். 

 மரக் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பிச்சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்

.
வவுனியாவில் பாரிய மரக் கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிப்பு Reviewed by Author on May 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.