அண்மைய செய்திகள்

recent
-

புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியாசலை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கட்டில்கள் வழங்கி வைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியாசலையில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கட்டில் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஒரு தொகுதி கட்டில்கள் இன்றைய தினம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் தயானந்தரூபன் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த கட்டில்கள் முல்லைத்தீவு மாவட்ட சம்மேளனத்தலைவர் கே.தனுசன் மற்றும் இளைஞர் பாராளுமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் சி.சிவறஞ்சன் ஆகியோரினால் கையளிக்கப்பட்டது. இச் செயற்திட்டத்திற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் பிரதேச சம்மேளன உறுப்பினர்கள், இளைஞர்கள், மற்றும் நிதி ஆதரவு வழங்கியவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியாசலை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கட்டில்கள் வழங்கி வைப்பு! Reviewed by Author on May 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.