அண்மைய செய்திகள்

recent
-

1 கோடியே 20 இலட்சம் ரூபா மதிப்புள்ள பீடி இலைகளுடன் 6 பேர் கைது

தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1500 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் நீர்கொழும்பு கடற்கரைப் பகுதியில் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பீடி இலைகளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி 1 கோடியே 20 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. 

 குறித்த பீடி இலைகள் தூத்துக்குடியிலிருந்து சர்வதேச கடற்பிராந்தியம் வரை கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இலங்கை படகு மூலம் அவை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. பீடி இலைகளை கொண்டு செல்வதற்காக வந்த மூன்று வாகனங்களும் பொலிஸ் விசே
ட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளுடன் சந்கேநபர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




1 கோடியே 20 இலட்சம் ரூபா மதிப்புள்ள பீடி இலைகளுடன் 6 பேர் கைது Reviewed by Author on May 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.