வற்றாப்பளை கண்ணகை அம்மன் வருடாந்த பொங்கல் உற்சவம் : பாக்குத்தெண்டல் உற்சவத்துடன் ஆரம்பமாகியது!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பக்தர்கள் ஆலயத்துக்கு வருகின்ற நிகழ்வானது தடை செய்யப்பட்டுள்ளதோடு ஆலய நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆலய சம்பிரதாய கிரிகைகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆலய நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணி இந்த ஆலய கிரிகைகளை ஆரம்பமாகியுள்ளது
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிப்பதற்காக அவர்களது வீடுகளுக்கு சென்று பாக்குத்தெண்டல் இடம்பெற்றது.
கண்ணகி தெய்வத்தின் பக்தனாகிய பக்தஞானி தென்னிந்தியாவில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கிராமத்தில் தங்கியிருந்த காலத்தில் வற்றாப்பளை பொங்கல் சடங்குகளை ஓர் சீர் வரிசைப்படுத்துவதற்காக பாக்குத்தெண்டல் தொடக்கம் சிலாவத்தை தீர்த்தக்கரையில் தீர்தம் எடுத்தல் காட்டா விநாயகர் ஆலயத்தில் தீபமேற்றுதல் போன்ற பல சடங்குகளை அருளி நின்றார்.
இந்த தினத்திலே அதிகாலை இரண்டு மணியளவில் காட்டா விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளை தொடர்ந்து கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிப்பதற்காக அவர்களது வீடுகளுக்கு சென்று பாக்குத்தெண்டல் இடம்பெறும். இந்த சம்பிரதாய நிகழ்வோடு ஆரம்பமாகும் உற்சவம் வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாக பொங்கலுடன் நிறைவடையும் .
அந்தவகையில் இன்று (10) பாக்கு தெண்டலுடன் ஆரம்பமாகும் இவ்வாண்டுக்கான(2021) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் 17-05-2021 திங்கட்கிழமை தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும், அதனை தொடர்ந்து 24-05-2021 திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மனின் பொங்கல் உற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வருடாந்த உற்சவ நிகழ்வுகளில் இம்முறை பக்தர்கள் கலந்துகொள்வது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வற்றாப்பளை கண்ணகை அம்மன் வருடாந்த பொங்கல் உற்சவம் : பாக்குத்தெண்டல் உற்சவத்துடன் ஆரம்பமாகியது!
Reviewed by Author
on
May 10, 2021
Rating:
No comments:
Post a Comment