அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உயிர் காக்கும் பணியில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் செயல் திட்டம் முன்னெடுப்பு.

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள் தோறும் தொற்றிற்கு உள்ளாகும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கக் கூடியவாறான ஏற்பாடுகள் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு இணையாக இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக 10 நாட்களில் 10,000 கட்டில்கள் எனும் செயல் திட்டம் நாடலாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட இளைஞர்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள உன்னத பணியை மிகவும் திறம்பட ஆற்றி வருகின்றனர்.

 -மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட காரியத்தின் ஊடாக மாவட்டங்களில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதேச சம்மேளனங்கள் ஊடாக கொரோனா நோயாளர்களை பராமரிப்பதற்கான தலா 10 கட்டில் உருவாக்கும் பணி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில். மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள பிரதேச சம்மேளனங்களிலும் 50 கட்டில்கள் உருவாக்கும் பணி மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. -மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு குறித்த செயல் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது







மன்னாரில் உயிர் காக்கும் பணியில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் செயல் திட்டம் முன்னெடுப்பு. Reviewed by Author on May 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.