அண்மைய செய்திகள்

recent
-

அம்பாறையில் மின்னல் தாக்கி மீனவர்கள் இருவர் பலி!

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருதில் இருந்து கடந்த (புதன்கிழமை) மாலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) இருவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

 இதன் போது கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கும் தொழிலை செய்துவந்த இவர்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணித்ததுடன் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த அன்ஸார் என்றழைக்கப்படும் இப்ராஹிம் இக்பால் (வயது-42) எம்.எஸ். அர்சாத் (வயது-35) ஆகியோரே மின்னலுக்கு இலக்காகி மரணித்துள்ளதுடன் இவர்களின் ஜனாஸாக்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த இப்ராஹிம் மன்சூர் (வயது- 43) உயிரிழந்த இப்ராஹிம் இக்பாலின் சகோதரர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறையில் மின்னல் தாக்கி மீனவர்கள் இருவர் பலி! Reviewed by Author on May 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.