மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் கையளிப்பு.
குறித்த சுகாதார பொருட்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கும்,மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் வழங்கி வைக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை (11) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது வைத்தியர், மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி, மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் கையளிப்பு.
Reviewed by Author
on
June 11, 2021
Rating:
No comments:
Post a Comment