அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் கையளிப்பு.

அரச சார்பற்ற அமைப்புக்களினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (11) மதியம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெலினால் சுகாதார துறையினருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. -கொரானா தொற்று சிகிச்சை நிலையங்களில் கடமையாற்றுபவர்களுக்கு என அரச சார்பற்ற அமைப்புக்களினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முகக்கவசம், தொற்று நீக்கி உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பொருட்கள் கைகளிக்கப்பட்டது. 

 குறித்த சுகாதார பொருட்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கும்,மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் வழங்கி வைக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை (11) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது வைத்தியர், மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி, மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் கையளிப்பு. Reviewed by Author on June 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.