அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கிய பிளாஸ்ரிக் பொருட்களின் மாதிரிகள் சேகரிப்பு

கடந்த வாரம் தென் பகுதி கடற்பரப்பில் தீப்பற்றிய எஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள பிளாஸ்ரிக் துண்டுகள் என நம்படும் சிறியளவிலான துணிக்கைகள் இன்று வியாழக்கிழமை(10) மன்னார் வங்காளை மற்றும் சிலாவத்துறை கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது லட்சக்கணக்கான சிறிய பிலஸ்ரிக் துண்டுகள் மற்றும் முக கிரீம் ஒன்றும் கரையொதுங்கிய நிலையில் மன்னார் கடற்படை மற்றும் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் முதல் கட்டமாக சம்பவம் இடம் பெற்ற பகுதிக்கு வருகை தந்து கரையொதுங்கிய பொருட்களை பார்வையிட்டதுடன் கரையொதுங்கிய பொருட்களின் மாதிரிகளையும் சேகரித்துள்ளனர்.

  அதே நேரம் குறித்த கடல் பகுதிக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ்நிர்மலநாதன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட்ட குழுவினர் வருகை தந்து நேரடியாக பார்வையிட்டுள்ளனர் நேற்று நள்ளிரவு தொடக்கம்  தற்போது வரை   மேற்படி பொருட்கள் கரை ஒதுங்கி வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
                 








மன்னார் கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கிய பிளாஸ்ரிக் பொருட்களின் மாதிரிகள் சேகரிப்பு Reviewed by Author on June 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.