தமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது.
இதனால் அந் நாட்டு மக்கள் வெளி நாடுகளுக்கு செல்ல முடியாத சூழ் நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு அருகே தமிழ் நாடு உள்ளதால் கடல் வழியாக தமிழகம் வந்து தமிழகத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு கடந்த 27ஆம் திகதி இலங்கை புத்தளம் மாவட்டம் சிலாபதுறையிலிருந்து 24 ஆண்கள் , இரண்டு பெண்கள் ஒரு குழந்தை என மொத்தமாக 27 பேர் படகு மூலம் கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் தூத்துக்குடி வந்தடைந்தனர்.
தூத்துக்குடி வந்த 27 பேரும் மதுரையில் தங்கி அங்கிருந்து கேரளா வழியாக கனடா செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இது குறித்து க்யூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து ராமநாதபுரம் மற்றும் மதுரை க்யூ பிரிவு பொலிசார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 27 பேரையும் மதுரையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 27 பேரும் கடவுச் சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது.
Reviewed by Author
on
June 12, 2021
Rating:
No comments:
Post a Comment