அண்மைய செய்திகள்

recent
-

கசிப்பு பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது கசிப்பு பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (10) அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவு வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 வளத்தாப்பிட்டியைச் சேர்ந்து 56 வயதுடைய ஏகாம்பரம் தங்கவேல் என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார். குறித்த பிரதேசத்திலுள்ள வயலுக்கு நீர் செல்லும் ஓடங்கரை வாய்க்கால் கரையில் தந்தையும் மகனும் அவர்களுடன் உறவினர் ஒருவர் உட்பட 3 பேர் சம்பவதினமான இன்று அதிகாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது கசிப்பு உற்பத்திக்கான பெரல் வெடித்து சிதறி தீ பரவியதை அடுத்து சம்பவ இடத்திலேயே 56 வயதுடை தந்தை உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கசிப்பு பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு Reviewed by Author on June 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.