அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் “ அன்பே சிவம் அமைப்பின் இடர்கால உதவிகள்”

அருள்மிகு சூரிச் சிவன்கோவில் சைவ தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினர் இடர்காலத்தில் முன்னேடுக்கும் “யாவருக்கும் ஆம் உண்ணும்போது ஓர் கைபிடி” என்னும் செயல் திட்டத்தின் கீழ் இன்று (2021-06-10) மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உள்பட்ட மடுக்கரை கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு உள்பட்ட நாளாந்த தினக்கூலி கொண்ட 66 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன

 தொடர்ச்சியான மனிதநேயப்பணிகளில் ஈடுபட்டுவரும் “ அன்பே சிவம் “ அமைப்பினர் திரு/ திருமதி சிவராசா-தேன்மதி தம்பதிகளின் நிதி உதவியுடனும் சுந்தரமூர்த்தி- திலீபன் அவர்களின் ஒருங்கிணைப்புடனும் இவ் பொருட்களை வழங்கியுள்ளார் இதனுடன் தொடர்புடைய அருள் மிகு சூரிச் சிவன் கோவில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினர்கள் சார்ந்த அனைவருக்கும் உதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள் சார்பாகவும் மன்னார் மாவட்ட ஏற்பாட்டாளர்கள் சார்பாகவும் நிறைவான நன்றிகளை தெரிவுத்துக்கொள்கின்றோம்.







மன்னாரில் “ அன்பே சிவம் அமைப்பின் இடர்கால உதவிகள்” Reviewed by Author on June 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.