வவுனியாவில் கற்பினித் தாய்மார்களின் ஆரோக்கியத்தில் விளையாடிய குடும்ப நல உத்தியோகத்தர்கள்..
ஒருபக்கம் கொரோனா அச்சம் காரணமாக முறையாக மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்லமுடியாமல் தவிக்கும் கற்பினித் தாய்மாருக்கு இவ்வாறான காலாவதியான மாத்திரைகளையும் வழங்கி பிறக்கப்போகும் குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடியுள்ள பொறுப்பற்ற உத்தியோகத்தர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே இரம்பைக்குளம் போன்ற பகுதிகளில் தமிழ் பேசத் தெரியாத பெரும்பான்மையின உத்தியோகத்தர்களை நியமித்துள்ள நிலையில் இதுவரை குழந்தைகளுக்கான திரிபோசாவை சரியாக வழங்காத இவர்கள் தற்போது மாத்திரைகளிலும் தமது அசமந்தப்போக்கை காட்டியுள்ளனர்.
இது உத்தியோகத்தர்களின் தவறா ? அல்லது மேலதிகாரிகளின் தவறா? அல்லது அனைவரும் இணைந்த கூட்டு செயற்பாடா?
இந்த விடயம் மனிதவுரிமை ஆணைக்குழு தொடக்கம் ஜனாதிபதி வரை அனைவரினதும் கவனத்திற்கு கொண்டு செல்ப்படும்.
தயவு செய்து கற்பினித்தாயமார் தமக்கு வழங்கப்படும் மாத்திரைகளை ஒரு தடவை நன்றாக பரிசோதித்து உட்கொள்வது நல்லது.
வவுனியாவில் கற்பினித் தாய்மார்களின் ஆரோக்கியத்தில் விளையாடிய குடும்ப நல உத்தியோகத்தர்கள்..
Reviewed by Author
on
June 04, 2021
Rating:
No comments:
Post a Comment