ரிஷாத் எம்.பி. வீட்டில் பணியாற்றிய 11 பெண்கள் குறித்து விசாரணை ஆரம்பம்
ரிஷாத் பதியுதீனின் வீட்டிற்கு அழைத்து வந்த ஏனைய சிறுமிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இவ்வாறு விஷேட பொலிஸ் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ரிஷாத் எம்.பி.யின் குடும்பத்தினருக்காக பணிபுரியவென 11 சிறுமிகள் அழைத்து வரப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
பல வருடங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் பணியாற்றிய 22 வயதுடைய யுவதியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் அவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் மனைவி, மனைவி யினது தந்தை மற்றும் சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாத் எம்.பி. வீட்டில் பணியாற்றிய 11 பெண்கள் குறித்து விசாரணை ஆரம்பம்
Reviewed by Author
on
July 26, 2021
Rating:
No comments:
Post a Comment